10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்த கோவை மாணவி : மாநில அளவில் முதலிடம்

கோவை : மத்திய பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த காவிய வர்ஷினி என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.


கோவை : மத்திய பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த காவிய வர்ஷினி என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

10-ம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை புலியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி மாணவி காவிய வர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி காவிய வர்ஷினி, தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 



பீளமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாபு என்பவரின் மகளான இவர், பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் தனது படிப்பிற்கு ஊக்கம் தந்ததாகவும், அன்றைய பாடத்தை அன்றே படித்ததாலும், புரிந்து படித்ததாலும் தன்னால் இந்த சாதனையை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். 



பள்ளி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ள காவியவர்ஷினி, எதிர்காலத்தில் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்து ஆன்காலஜி துறையில் பயில இருப்பதாகவும், யு.பி.எஸ்.இ. தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...