கோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி கொடி மற்றும் சின்னம் அறிமுகம்

கோவை: கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்து சமூக மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

கோவை: கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்து சமூக மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியினர் பேசியதாவது :- சமூக மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து இக்கட்சியை துவக்கி உள்ளோம். மேலும் இக்கட்சியின் தலைவராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் செல்வராஜ் பொறுப்பேற்க உள்ளார். பொதுச்செயலாளராக கோவையைச் சேர்ந்த அமுதா, விருதாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் பொருளாளராகவும் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். அமைப்பு செயலாளராக சிவகுமார், மாநில துணை செயலாளராக பேபி ஷகிலா, செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பேற்க உள்ளனர். 



அனைத்து சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. தங்களது அமைப்பில் தற்போது 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளோம். அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உறுதி, இலவச மருத்துவ சேவை ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதே கட்சியின் தலையாய நோக்கமாகும். விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும், என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...