சின்னவேடம்பட்டி குளக்கரையை பலப்படுத்த மரங்களை நடவு செய்யும் திட்டம்

கோவை : சின்னவேடம்பட்டி குளக்கரையை பலப்படுத்தவும் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் கரைப்பகுதிகளில் மரங்களை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை : சின்னவேடம்பட்டி குளக்கரையை பலப்படுத்தவும் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் கரைப்பகுதிகளில் மரங்களை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

சின்னவேடம்பட்டி குள மறுசீரமைப்பு குழுவினர் சி.டி.எஸ். நிறுவனத்தின் உதவுயுடன் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குளக்கரையைப் பலப்படுத்தவும் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, குளக்கரையின் ஒருபகுதியில், மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, பின்னர் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

"வெட்டிவேர் குளக்கரையை பலப்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கும். மேலும், மண் அரிப்பு ஏற்படாமலும் தடுக்கும். மண் அரிப்பை தடுப்பதற்கு இது இயற்கையான தீர்வாகும்," என்கின்றார் ஒருங்கிணைப்பாளர்.

இதேபோல, ராஜவாய்க்கால் மற்றும் பிற பகுதிகளில் ராபர்ட் போஸ்ச் நிறுவனத்தின் ஆதரவுடன் தன்னார்வலர்கள் கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...