கோவை : மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
கோவை : மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். நாடு முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, பழனிச்சாமியிடமும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தபட்டது. இந்த நிலையில், பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவரது மகன் ரோகின் மற்றும் உறவினர்கள், காசாளர் பழனிச்சாமி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். மேலும், வருமான வருத்துறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியதாகவும், அதேபோல அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் இரு உயரதிகாரிகள் மீது சந்தேகம் இருப்பதாக பழனிச்சாமியின் மகன் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை மட்டும் ஐ.ஜி.யை பார்க்க உள்ளே அனுமதித்தனர். ஐ ஜி அலுவலகத்துக்குள் சென்ற அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் அளித்தனர். அப்போது, காசாளர் தற்கொலை வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல, குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். நாடு முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, பழனிச்சாமியிடமும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தபட்டது. இந்த நிலையில், பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவரது மகன் ரோகின் மற்றும் உறவினர்கள், காசாளர் பழனிச்சாமி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். மேலும், வருமான வருத்துறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியதாகவும், அதேபோல அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் இரு உயரதிகாரிகள் மீது சந்தேகம் இருப்பதாக பழனிச்சாமியின் மகன் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை மட்டும் ஐ.ஜி.யை பார்க்க உள்ளே அனுமதித்தனர். ஐ ஜி அலுவலகத்துக்குள் சென்ற அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் அளித்தனர். அப்போது, காசாளர் தற்கொலை வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல, குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
.