சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் விடுவி


சிரியாவில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் கடந்த அக்டோபர் மாதம் கடத்தப்பட்டார்; கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

புதன்கிழமையன்று அப்பெண்ணின் பெயரை வெளியிடாமல், அவரை பற்றி தெரிவித்த ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர், துருக்கியில் உள்ள எல்லையை அவர் பாதுகாப்பாக கடந்து சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணும் அவரின் குழந்தையும் தற்போதைய சூழலில் நலமாக இருப்பதாகவும், அவர் ஜெர்மன் தூதரக ஊழியர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் செய்திதாளான பில்ட், அந்த பெண் நிறுவனம் சாரா ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர் என தெரிவித்துள்ளது.

அல் கெய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவொன்றால் அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் யூரோக்களை கேட்டிருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...