பாகிஸ்தான் திருப்பியடிக்கும் அபாயம். எல்லை கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்

சண்டிகர்: இந்திய விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், புகுந்து இந்தியா நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து எல்லை நெடுகிலும் ராணுவம் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. எதற்கும் தயார் என்ற நிலையில் ராணுவம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் அனைத்தும் தற்போது காலியாகி வருகிறது. அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளைக் காலிசெய்து விட்டு கூட்டம் கூட்டமாக வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தீவிரவாதிகள் புகுந்து தாக்கக் கூடும் என்பதால் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் எல்லைப் புற கிராமங்களில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...