கோவையில் அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு

கோவை மாநகரில், அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் மாநாட்டில் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, கோவை ஜெம் மருத்துவமனை அக்டோபர் 6ம் தேதி  முதல் 9ம் வரை கொடிசியா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. கோவையில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இம்மாநாட்டில் 1500க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச அறுவை சிகிச்சை மருத்துவர்கள்  பங்கேற்கவுள்ளனர். 




இம்மாநாட்டில், அக்டோபர் 6ம் தேதி முதல் நாளன்று, அறுவை சிகிச்சை ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்ட  உள்ளது. இதில், உணவுக்குழாய், இறப்பை, பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல் ஆகியவற்றின் வரும் புற்றுநோய்களை லேப்பிரோஸ்கோப்பிக்  மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை மூலமாக செய்து காண்பிக்க உள்ளனர். இந்த ஒளிபரப்பினை 4K மற்றும் 3D மூலம்  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 4K ஒளிபரப்பானது ஜீரண மண்டல உறுப்புகளை  மிக துல்லியமாக  காட்டக்கூடியது. மற்றும் அறுவை சிகிச்சைக்கு எளிதாக பயன்படக்கூடியது. இந்தியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை மற்றும் நேரடி ஒளிபரப்பு இம்மாநாட்டில் காண்பிக்கப்பட்ட உள்ளது. 


அக்டோபர் 7ம் தேதி இரண்டாம் நாளாக, தொடர்ச்சியான மருத்துவ கல்வி (CME) என்ற தலைப்பில் சர்ச்சைகள், சிக்கல்கள் மற்றும் ஒருமித்த கருத்தாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு ஜீரண மண்டல சிகிச்சைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. டாக்டர்.சி.பழனிவேலு தமையில் கணையம் பற்றிய லேப்பிரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஜெர்மன், கொரிய, ஜப்பான் மற்றும் பல் நாடுகளில் இருந்து 35 பேராசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். 


அக்டோபர் 8ம் தேதி மூன்றாம் நாளன்று, உலக புகழ்பெற்ற சர்வதேச மற்றும் இந்திய ஜீரண மண்டல நிபுணர்களின் சிகிச்சை பற்றிய கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக்  கல்லீரல் அறுவை சிகிச்சைக்கான இரண்டாவது ஆசியா பசிபிக் நிபுணர் குழுவின் மனசு நடைபெறவுள்ளது. இதில், சீனா, கொரிய, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த கல்லீரல் அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு நடப்பது இம்மாநாட்டில் முதல்முறையாகும். SSAT  முதல்முறையாக இம்மாநாட்டில் பங்கேற்கிறது. 


அக்டோபர் 9ம் தேதி இறுதி நாளன்று, நடக்கும் மாநாட்டில் இத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மருத்துவ பேராசிரியர்கள் தங்கள் மருத்துவ பயணத்தை எடுத்துரைக்கவுள்ளனர். இம்மாநாட்டியில் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல்முறை அறுவை சிகிச்சை கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக் கணைய அறுவை சிகிக்சை பற்றி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஜெம் மருத்துவமனையின் மருத்துவமனையின் முதன்மை மருத்துவரான டாக்டர்.சி.பழனிவேலு  மற்றும் மருத்துவகுழுக்கள் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...