நீலகிரி : உதகையில் 3 நாட்கள் நடைபெற்ற 127-வது நாய்கள் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தன.
நீலகிரி : உதகையில் 3 நாட்கள் நடைபெற்ற 127-வது நாய்கள் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தன.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கைளச் சார்ந்த 53 இனங்களைச் சார்ந்த 340 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பொமோரியன், டால்மேஷன், ராஜபாளையம், கிரேட் டேன், டஷ் ஹவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.

நாய்களுக்கான கீழ்படிதல் போட்டியில் காவல்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நாய்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின. மேலும், நாய்களின் அணிவகுப்பு, மோப்ப சக்தி உள்ளிட்ட தனி திறமைகளை இதில் கலந்து கொண்ட நாய்கள் வெளிப்படுத்தின. இறுதி நாள் என்பதால் அனைத்து ரக நாய்களும் கலந்து கொண்டன.

இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து சென்றனர். வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கைளச் சார்ந்த 53 இனங்களைச் சார்ந்த 340 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பொமோரியன், டால்மேஷன், ராஜபாளையம், கிரேட் டேன், டஷ் ஹவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.

நாய்களுக்கான கீழ்படிதல் போட்டியில் காவல்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நாய்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின. மேலும், நாய்களின் அணிவகுப்பு, மோப்ப சக்தி உள்ளிட்ட தனி திறமைகளை இதில் கலந்து கொண்ட நாய்கள் வெளிப்படுத்தின. இறுதி நாள் என்பதால் அனைத்து ரக நாய்களும் கலந்து கொண்டன.

இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து சென்றனர். வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
