கோவையில் 15,960 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பு

கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வில் 15,960 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.


கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வில் 15,960 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 14 மாவட்டங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர பகுதியில் 21 மையங்களும், புறநகர் பகுதியில் 11 மையங்களும் என மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தமிழக எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாணவர்கள் என 15 ஆயிரத்து 960 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதில், மாநகர் பகுதியில் 10,200 மாணவர்களும், புறநகர் பகுதியில் 5,760 மாணவர்களும் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலேயே நடத்தப்படுகிறது. தேர்வு தொடர்பாக சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அதிகாரிகளின் தலைமையின்கீழ் தேர்வு மையங்கள், கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள், வழித்தட அலுவலர்கள், மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



தேர்வு எழுத வரும் மாணவர்கள் 12 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. தேர்வெழுத வரும் மாணவர்கள் முழுவதுமாக சோதனை நடத்திய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் புகைப்படம், தபால் அட்டை அளவிலான புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். கடந்த ஆண்டு போலவே, மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள், முழுக்கை சட்டை, விதவிதமான சுடிதார், எம்ராய்டரி வைத்த ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.



மேலும், சர்க்கரை நோய் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மாத்திரைகள், பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...