கோவை : தோல்வி பயத்தால் அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
கோவை : தோல்வி பயத்தால் அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

சூலூர் இடைத்தேர்தலுக்கான மதசார்பற்ற வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தனது அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். சொல்வதற்கு பா.ஜ.க. ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லை. ஆதலால் ராகுல் காந்தியை வெளிநாட்டவர் என்று சொல்லி அரசியல் செய்கின்றனர். புல்வாமா சம்பவத்தில் ராணுவ நடவடிக்கைகளை மோடி மாற்றி அமைத்ததே வீரர்கள் உயிர் பலிக்கு காரணம். தமிழிசை சௌந்திரராஜனுக்கு வரலாறு தெரியவில்லை. தானே புயலுக்கு காங்கிரஸ் ஆட்சியின்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேரில் பார்வையிட்டார். கஜா புயலுக்கு பா.ஜ.க. சார்பில் ஒரு நிர்வாகி கூட வாயை திறக்கவில்லை.
நீட் தேர்வில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. பா.ஜ.க. போல் மாநிலங்களுக்கு எதிராக செயல்படாது.
மூன்று எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயக போக்கு கிடையாது. மோடியுடன் சேர்ந்து எடப்பாடி அரசும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் அமைச்சரவை அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். அதனால், உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது அந்தந்த மாநிலங்களில் தேர்வுகளை நடத்தி பணியில் அமர்த்தப்பட வேண்டும், என்றார்.