கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இருகூர் சந்தை பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார்.
கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இருகூர் சந்தை பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று இரவு கோவை விமான நிலையம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில் உள்ள சந்தையில் நடைபயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, அவர் அந்தப் பகுதி மக்களிடம், பொங்கலூர் பழனிச்சாமிக்கு உங்களது பொன்னான வாக்குகளை தாருங்கள் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும், அப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க தயாராக உள்ளதாகக் கூறினார். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு உங்களது வாக்குகளை தாருங்கள் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.