நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்வெழுத தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்வெழுத தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே 14 நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதியம் 12.30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டுமென தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. தேர்வுகுறித்த முக்கிய நடைமுறைகள், ஹால் டிக்கெட் பரிசீலனை என அனைத்தும் முடிவடைந்து, 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு வழங்கப்படும்.ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகை பதிவுத்தாளில், மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மாலை 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது.
தேர்வெழுத பால்பாயின்ட் பேனா ஒன்று தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என்பதால், பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் என எதுவும் கொண்டு செல்லக் கூடாது. இவை தவிர, மொபைல் போன், பென்டிரைவ், புளூடூத், கை கடிகாரம், காதணி, வளையல் போன்ற ஆபரணங்களுக்கும் அனுமதி இல்லை. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மென்மையான அரைக்கை சட்டை அணியலாம். மாணவிகள் முழுக்கை சுடிதார் அணியக் கூடாது. ஷூ அணிவதற்கு பதிலாக லோ ஹீல்ஸ் காலணி மற்றும் சாதாரண காலணிகள் மட்டுமே அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே 14 நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதியம் 12.30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டுமென தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. தேர்வுகுறித்த முக்கிய நடைமுறைகள், ஹால் டிக்கெட் பரிசீலனை என அனைத்தும் முடிவடைந்து, 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு வழங்கப்படும்.ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகை பதிவுத்தாளில், மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மாலை 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது.
தேர்வெழுத பால்பாயின்ட் பேனா ஒன்று தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என்பதால், பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் என எதுவும் கொண்டு செல்லக் கூடாது. இவை தவிர, மொபைல் போன், பென்டிரைவ், புளூடூத், கை கடிகாரம், காதணி, வளையல் போன்ற ஆபரணங்களுக்கும் அனுமதி இல்லை. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மென்மையான அரைக்கை சட்டை அணியலாம். மாணவிகள் முழுக்கை சுடிதார் அணியக் கூடாது. ஷூ அணிவதற்கு பதிலாக லோ ஹீல்ஸ் காலணி மற்றும் சாதாரண காலணிகள் மட்டுமே அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.