கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன ஊழியரின் உடல்

கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கோவை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கோவை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் நேற்று லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவரது மகன் ரோகின் குமார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இதனை விசாரித்த நீதிபதி, ஆர்.டி.ஓ. தலைமையில் இறந்தவரின் சார்பில் ஒரு மருத்துவரை நியமித்து பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் அனுமதி அளித்தார்.



இதனையடுத்து, பழனிச்சாமியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 

காசாளர் பழனிச்சாமியின் மரணத்திற்கு காரணம் வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் என்றும், மேலும், அவர் பணிபுரிந்த அலுவலக ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவரது மகன் ரோகின் குமார் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...