கோவை : கோவை மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நடத்தப்பட்ட சோதனையில் 3,361.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நடத்தப்பட்ட சோதனையில் 3,361.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருக்கிறதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரையில் கோவை மாவட்டத்தில் மண்டல வாரியாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 16,819 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 3,361.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக கடையின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 9,95,510 ரொக்கம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருக்கிறதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரையில் கோவை மாவட்டத்தில் மண்டல வாரியாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 16,819 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 3,361.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக கடையின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 9,95,510 ரொக்கம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.