கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 220 கிலோ எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 220 கிலோ எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்வதாக கோவை மாவட்ட நியமன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் குழு மாம்பழ குடோன் மற்றும் சில்லறை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், கோவை - சக்தி சாலையில் உள்ள கணபதி பகுதியில் 4 மாம்பழ விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 220 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவை அனைத்தும் குப்பையில் கொட்டி முறைப்படி அழிக்கப்பட்டது. தொடர்ந்து, இது போன்ற செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, உணவு சம்பந்தமான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.