கோத்தகிரியில் காட்டு யானைகள் தஞ்சம் : கவனமாக செல்ல வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை அறிவுரை

நீலகிரி : கோத்தகிரியை அடுத்துள்ள உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடி அருகில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரியை அடுத்துள்ள உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடி அருகில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக் காலத்தில் பலாப்பழ சீசனையொட்டி, குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஆதிவாசி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குஞ்சப்பனை சோதனை சாவடி மற்றும் மாமரம் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சாலையோர பகுதிகளிலும், தோட்டங்களிலும் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

எனவே, வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். யானைகளைக் கண்டால் ஒலிப்பான் ஓலிப்பதை தவிர்க்க வேண்டும். யானைகளுக்கு தொல்லை அளித்தல் கூடாது. மேலும், சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு அருகே சென்று செல்போனில் "செல்பி" எடுக்க முயற்சிக்கக் கூடாது, என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...