2-வது சர்வதேச பனை பொருளாதார மாநாட்டில் இரு புத்தகங்கள் வெளியீடு

கோவை : கோவையில் நடைபெற்ற 2-வது பனை பொருளாதார மாநாட்டில், பனை மரத்தினால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளை விளக்கும் வகையிலான இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.


கோவை : கோவையில் நடைபெற்ற 2-வது சர்வதேச பனை பொருளாதார மாநாட்டில், பனை மரத்தினால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளை விளக்கும் வகையிலான இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 



உலகப் பனை வேளாண் பொருளாதாரப் பேரமைப்பு சார்பில் மூன்று நாள் நடக்கும் 2-வது உலகப் பனை பொருளாதார மாநாடு சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாளில், முன்னாள் மத்திய கயிறு வாரியத்துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் சாந்தலிங்க அடிகளார் கலந்து கொண்டனர். பார்க் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுஷா ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 



இந்த நிகழ்ச்சியில், குமாரி நம்பி எழுதிய 'பனை பொருளாதாரம்' மற்றும் உடுமலை கவி எழுதிய 'பனை எழுபது' ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. 'பனை பொருளாதாரம்' புத்தகமானது பனை மரத்தினால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளை விளக்குவதாக இருக்கிறது. இதேபோல, 'பனை எழுபது' புத்தகமானது பனை மரத்தின் வகைகளும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. 



இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பனை மரம் மற்று அதன் காய்களினால் உருவாக்கப்பட்ட தின்பண்டங்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் சுமார் 2,500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...