சூலூரில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஈஸ்வரன் பிரச்சாரம்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று வாக்கு சேகரித்தார்.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று வாக்கு சேகரித்தார்.

சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான காடுவெட்டி பாளையாம், கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் தீவர பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது ஈஸ்வரன் பேசியதாவது :- அ.தி.மு.க. ஆட்சி குற்றவாளிகளைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சியாக உள்ளது. எனவே, இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. உதாரணத்திற்கு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு இந்த ஆட்சி பாதுகாவலனாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் பட்டப்பகலில் 12 மணிக்குக் கூட பெண்கள் நடமாட முடியவில்லை. ஈரோடு, பெரம்பலூரில் நடைபெற்ற சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இன்மையைக் காட்டுகின்றது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அ.தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் கொள்ளையடிக்க தமிழக மக்கள் ஓட்டுப் போட வேண்டாம். 8 ஆண்டுகளாக தமிழக மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும், என்றார்.



இந்த பிரச்சாரத்தின் போது, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...