பிளஸ் 1 மாணவர் சேர்க்கை குறித்து புகார் வந்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை : கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கோவை : பிளஸ் 1 மாணவர்களின் சேர்க்கை குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : பிளஸ் 1 மாணவர்களின் சேர்க்கை குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-19-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு நிதி உதவி பெறும்/ சுயநிதி/ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேர்க்கை அளிக்கப்பட வேண்டும்.

2019-20-ம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் போது, தற்போது நடைமுறையில் உள்ள இனவாரியாக ஒதுக்கீட்டின்படி பாடவாரியாக சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் சேர்க்கையின் போது, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டினை பின்பற்றி கண்டிப்பாக சேர்க்கை அளிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் சேர்க்கை சம்பந்தமாக பள்ளிகள் மீது புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டாலோ விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...