சென்னை : உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட இன்னும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட இன்னும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தற்போது வரையிலும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், உள்ளாட்சிப் பணிகள் பாதிப்படைகிறது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணையின் போது, வார்டு வரையறை பணிகள் முடிவடையாமல் இருப்பதால் கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால், தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே தான், உள்ளாட்சித் தேர்தலை தற்பொழுது நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும், உள்ளாட்சிப் பணிகளை மக்கள் நல பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். அதனால், எந்தவொரு பணியும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தற்போது வரையிலும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், உள்ளாட்சிப் பணிகள் பாதிப்படைகிறது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணையின் போது, வார்டு வரையறை பணிகள் முடிவடையாமல் இருப்பதால் கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால், தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே தான், உள்ளாட்சித் தேர்தலை தற்பொழுது நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும், உள்ளாட்சிப் பணிகளை மக்கள் நல பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். அதனால், எந்தவொரு பணியும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.