கோவை : பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை விருந்தை ஏற்பாடு செய்த முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.
கோவை : பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை விருந்தை ஏற்பாடு செய்த முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

சேத்துமடை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கோவையில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர், நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொகைன், போதை ஊசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் 159 பேரை கைது செய்தனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, இவர்களது சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சொகுசு விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போதை விருந்தை ஏற்பாடு செய்த முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அதிரடியாக உத்தரவிட்டார்.