சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை ரோஜா பூங்காவில் பட்டாம்பூச்சி வடிவமைப்பில் செல்ஃபி ஸ்பாட் அறிமுகம்

நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமா, 15 ஆயிரம் மலர்களில் பட்டாம்பூச்சி வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி ஸ்பாட் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமா, 15 ஆயிரம் மலர்களில் பட்டாம்பூச்சி வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி ஸ்பாட் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மட்டும் நடைபெறும் எனவும், மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாகம் 15 ஆயிரம் மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி உருவம் வடிவமைத்துள்ளது. இது, சுற்றுலாப் பயணிகள் சுய புகைப்படம் (செல்ஃபி) எடுக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இது பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதோடு, ஆர்வத்துடன் அதன் முன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...