சூலூர் சட்டமன்ற தொகுதி அடிப்படை தேவைகள் : பட்டியலை வெளியிட்ட அத்திக்கடவு - கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தொகுதியின் அடிப்படை தேவைகள் பற்றிய பட்டியலை அத்திக்கடவு - கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ளது.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தொகுதியின் அடிப்படை தேவைகள் பற்றிய பட்டியலை அத்திக்கடவு - கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ளது. 

அதாவது :- சூலூர் தொகுதிக்குட்பட்ட நீர்வழிப்பாதையை தூர்வாரி, ஏரி பலப்படுத்தவும், தடுப்பணைகள் சீர்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கௌசிகா நதி பாதையில் உள்ள உள்ளர்ட்சி அமைப்புகளின் கழிவுநீரை சுத்திகரித்து, நதியின் கரை ஓரங்களில் நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும். கௌசிகா குளம் புனரமைக்கப்பட வேண்டும். 

கௌசிகா நதியின் அரசூர் - கணபதிபாளையம் கிளை ஓடையை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அத்திக்கடவு 2-வது திட்டத்தில் சின்னவேடம்பட்டி ஏரி சேர்க்கப்பட்டுள்ளதைப் போன்று, சின்னியம்பாளையம், நீலம்பூர், முதலிபாளையம், அரசூர், கணியூர், பொத்தியம்பாளையம் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளையும் அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

சோமனூர் பகுதிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். கருமத்தம்பட்டியில் கிரே காட்டன் ஜவுளி சந்தை ஏற்படுத்தி தர வேண்டும். சோமனூர் ரயில்நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கருமத்தம்பட்டி, தென்னம்பாளையத்தில் குடிநீர் மற்றும் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.கருமத்தம்பட்டியில் அரசு கொள்முதல் நிலையம், குளிர்பதன கிடங்குகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...