நீலகிரி : உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் நாய்கள் கண்காட்சியில், நாடு முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.
நீலகிரி : உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் நாய்கள் கண்காட்சியில், நாடு முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழாவினை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மலர்கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டுள்ளன. கீழ்படிதல், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெற்றி பெறும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய பங்காற்றிய போலீஸ் மோப்ப நாய் பென்னி மற்றும் உயர்வகை கோல்டன் ரிட்ரீவர் வகை நாய்கள், லேபர் டாக் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கலந்து கொண்டன.

இதில், வெற்றிபெறும் நாய்களுக்கு இறுதிப் பரிசு வரும் 5-ம் தேதி வழங்கப்படவுள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழாவினை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மலர்கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டுள்ளன. கீழ்படிதல், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெற்றி பெறும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய பங்காற்றிய போலீஸ் மோப்ப நாய் பென்னி மற்றும் உயர்வகை கோல்டன் ரிட்ரீவர் வகை நாய்கள், லேபர் டாக் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கலந்து கொண்டன.

இதில், வெற்றிபெறும் நாய்களுக்கு இறுதிப் பரிசு வரும் 5-ம் தேதி வழங்கப்படவுள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.