உதகையில் கல்வாரி எனப்படும் காந்தள் குருசடி திருத்தலத்தின் 80-ம் ஆண்டு விழா

நீலகிரி : கல்வாரி என்றழைக்கப்படும் காந்தள் குருசடி திருத்தலத்தின் 80-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நல்லாட்சி அமைந்து நாட்டு மக்கள் வளமுடன் வாழவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

நீலகிரி : கல்வாரி என்றழைக்கப்படும் காந்தள் குருசடி திருத்தலத்தின் 80-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நல்லாட்சி அமைந்து நாட்டு மக்கள் வளமுடன் வாழவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை காந்தள், முக்கோணம் பகுதியில் அமைந்துள்ளது கல்வாரி என்றழைக்கப்படும் குருசடி திருத்தலம். இயேசு கல்வாரியில் சுமந்த உண்மையான திருச்சிலுவையின் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ள சிறப்புமிக்க இத்திருத்தலத்தின் 80-ம் ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது. கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இப்பெருவிழா இன்று உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



இந்த திருப்பலியில், நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் நடக்கவுள்ள இடைத்தேர்தல் ஆகியவற்றை முடிந்து, நல்லாட்சி அமைந்து, நாட்டு மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்றும், தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலய பங்கு தந்தைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...