கோத்தகிரி நேரு பூங்காவில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட மலர்கள் : சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்துள்ள மலர்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்துள்ள மலர்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.



கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக பராமரித்து வருகிறது. இங்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மலர் நாற்றுகள் அனைத்தும் தற்போது பூத்து குலுங்குகின்றன. பூங்காவில், மலர் நாற்றுகளுக்கு, பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் தயார் செய்யப்பட்ட இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 



இதனால், செடிகள் செழித்து வளர்ந்துள்ளதுடன், வழக்கத்திற்கு மாறாக, மலர்களும் பெரிதாக பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, சூரிய காந்தி, ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கி வசீகரிப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...