கோவை : கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என சூலூர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
கோவை : கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என சூலூர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு கதிரேசன் என்பவர் விவசாயத்தைச் சார்ந்த தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். நாட்டுப்பற்று உள்ளிட்ட 14 கோரிக்கைகள் முன்னிறுத்தி போட்டியிடுகிறார். மேலும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், கள்-லும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் தான் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்குகிறோம்.

இன்று காலை பிடித்து காசு கொடுப்பவர்கள் நாளை கழுத்தை நெறித்து பணம் கேட்பார்கள். விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து நீதி பெற வேண்டும். மதுவிலக்கு மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். உணவுப் பொருட்களின் இறக்குமதி ஒரு தேசிய அவமானமாகும். மேலும், விவசாயத்திற்கு தனியான பட்ஜெட் ஒதுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் கதிரேசனை ஆதரித்து விவசாயத்தைக் காப்போம், நாட்டையும் காப்போம் என்ற உறுதிமொழியை முன்னிறுத்தினர்.