கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த லாரியில் கொம்பேரி மூக்கன் பாம்பு : இலாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட நீலகிரி வனத்துறையினர்

நீலகிரி : நொண்டிமேடு பகுதியில் சமவெளி பகுதியில் வாழும் விஷம் இல்லாத கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்த வனத்துறையினர், அதனை கல்லட்டி பள்ளத்தாக்கு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

நீலகிரி : நொண்டிமேடு பகுதியில் சமவெளி பகுதியில் வாழும் விஷம் இல்லாத கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்த வனத்துறையினர், அதனை கல்லட்டி பள்ளத்தாக்கு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை மற்றும் பல்வேறு பாம்பு இனங்கள் வாழ்ந்து வருகினறன. இந்த நிலையில், உதகை நொண்டிமேடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீடு கட்டுவதற்காக சமவெளி பிரேதஷங்களில் இருந்து கட்டுமானப் பொருட்களான ஜல்லி, மணல், செங்கல் போன்ற பொருட்களை ஏற்றி வருகின்றனர்.



இவ்வாறு லாரிகளில் ஏற்றி வரும் போது வெப்பம் மிகுந்த சமவெளி பிரதேசங்களில் இருந்து எடுத்து வரும் பொருட்களுடன் பல்வேறு பாம்புகள் உதகைக்கு வருவது வழக்கமான நிலையில், உதகை நொண்டிமேடு பகுதியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து விஷம் தன்மையற்ற கொம்பேரி மூக்கன் பாம்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர், அந்த பாம்பை பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், அந்த பாம்பை உயிருடன் மீட்டு கல்லட்டி பள்ளத்தாக்கில் கொண்டு விட்டனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...