இந்த மாதத்துடன் முடிவடைகிறது கோவை ரயில்நிலைய மல்டி லெவல் வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமானப் பணிகள்

கோவை : கோவை ரயில்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை சமாளிக்க ரயில்நிலையத்தின் பின்புறம் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமானப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை : கோவை ரயில்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை சமாளிக்க ரயில்நிலையத்தின் பின்புறம் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமானப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்னக ரயில்வே சேலம் கோட்டம் கட்டுப்பாட்டில் கோவை ரயில்நிலையம் உள்ளது. இங்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர். கோவை ரயில்நிலையத்தில் சராசரியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பயணிகள் நிறுத்தி செல்கின்றனர். ஆனால், வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமல் வெயில் மற்றும் மழையில் திறந்தவெளியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், போதிய இடவசதி இல்லாததால், வாகனங்களை நிறுத்தி விட்டு, ரயிலை பிடிப்பதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கோவை ரயில்நிலையத்தின் பின்புறத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடம் ரூ. 2.1 கோடி செலவில் துவக்கப்பட்டது. இந்த பணி பிப்ரவரி மாதமே நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பணிகள் தாமதாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த மாதம் இறுதிக்குள் இந்த மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவடையும் எனவும், 800 இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்தலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...