மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை : இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எச்சரிக்கை

கோவை : மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ சங்கத்தை பொதுமக்கள் அணுகலாம் எனவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


கோவை : மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ சங்கத்தை பொதுமக்கள் அணுகலாம் எனவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இடையர்பாளையம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்காததால், விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தினால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :- மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்பட்டால். பொதுமக்கள் மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் தாக்குகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சையில் ஏதாவது தவறு ஏற்பட்டால் சட்டப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மருத்துவமனையை அச்சுறுத்தும் வகையில் இடர்பாடுகளை கொடுத்தால், தாக்குதல் நடத்தினால் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் 48/2008-இன் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிகிச்சை வழங்காத மருத்துவர்கள் இறப்புச் சான்றிதழ்கள் வழங்க முடியாது. இது அரசு பணியாளர்கள் மூலம் மட்டுமே இறப்பு சான்றிதழ் பெற வேண்டும், இதற்கு சிகிச்சை வழங்காத மருத்துவர்கள் பொறுப்பல்ல, என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...