கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
அதில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளான இன்று, எந்த வேட்பாளரும் வாபஸ் பெறவில்லை. இதனால், 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதன்படி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், உழைப்பாளி மக்கள் கட்சி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அ.ம.மு.க. உள்ளிட்ட 16 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அ.ம.மு.க.விற்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளான இன்று, எந்த வேட்பாளரும் வாபஸ் பெறவில்லை. இதனால், 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதன்படி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், உழைப்பாளி மக்கள் கட்சி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அ.ம.மு.க. உள்ளிட்ட 16 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடும் அ.ம.மு.க.விற்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.