கோவை : தடாகம் அருகே காட்டு யானை தாக்கியதில் வீடு சேதமடைந்த சம்பவம் அப்பகுதிமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : தடாகம் அருகே காட்டு யானை தாக்கியதில் வீடு சேதமடைந்த சம்பவம் அப்பகுதிமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தடாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கலையனூர் அருகே உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்து உணவு தேடியது. பின்னர், கந்தவேலு மற்றும் ஆனந்தன் ஆகியோரின் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது. தொடர்ந்து, அருகே இருந்த வீட்டையும் காட்டு யானை சேதப்படுத்தியது. இதில், வீட்டின் கதவு மற்றும் மேற்கூறை சேதமாகின.
இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.