நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான சாலை ஓரத்தில் பல இடங்களில் மே மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான சாலை ஓரத்தில் பல இடங்களில் மே மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம், இந்த மே மலர்கள் மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குவதால் வாகனத்தில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த மலர்கள் பொதுவாக மரத்தில் பூப்பதால் கொண்டை ஊசி வளைவுள்ள சாலைகளில், பேருந்துகளில் பயணிப்போர் வாகனத்தில் அமர்ந்தவாரே இவற்றை காண முடிகிறது.

இந்த மலர் நீலகிரி மாவட்டத்தின் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல், மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலர்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மலர்கள் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம், இந்த மே மலர்கள் மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குவதால் வாகனத்தில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த மலர்கள் பொதுவாக மரத்தில் பூப்பதால் கொண்டை ஊசி வளைவுள்ள சாலைகளில், பேருந்துகளில் பயணிப்போர் வாகனத்தில் அமர்ந்தவாரே இவற்றை காண முடிகிறது.

இந்த மலர் நீலகிரி மாவட்டத்தின் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல், மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலர்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மலர்கள் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.