கோவை : வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் ஏற்படும் மின்சார தடையே, பொதுமக்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகும் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
கோவை : வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் ஏற்படும் மின்சார தடையே, பொதுமக்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகும் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
காருண்யா நகர் அருகே உள்ள நூர்வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவரின் மனைவி எஸ். சின்னமணி (65). உடல்நலக் குறைவால் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சின்னமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால், புழுக்கம் தாங்காமல் வீட்டின் வெளியே சின்னமணி படுத்திருந்தார். அப்போது, சுமார் அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டின் பக்கம் குட்டியுடன் வந்த காட்டு யானை சின்னமணியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதனிடையே, தங்களது பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுவதே, மூதாட்டியின் உயிரிழப்பிற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
"இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால், வீடுகளை விட்டு வெளியே தூங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். வீட்டின் உள்ளே புழுக்கம் நிலவுவதால், உயிரை பிணையம் வைத்து பெரும்பாலான குடும்பங்கள் வீடுகளுக்கு வெளியே சிறிது தூக்கம் பெறுகின்றனர். நாள்தோறும் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது," என்கிறார் உள்ளூர் குடியிருப்புவாசி.
யானைகளின் நடமாட்டத்தை தவிர்க்கும் விதமாக, வனத்துறையினர் வீடுகளுக்கு வெளியே இரவு நேரங்களில் விளக்குகளை எரிய விடுமாறு எச்சரிக்கின்றனர். ஆனால், மின்சாரம் தடைபடும்போது, எவ்வாறு மின்விளக்குகளை எரிய விடமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், மின்வெட்டு தொடர்பாக மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆனால், இது தொடர்பாக, ஆலந்துரை மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, தொடர் மின்வெட்டு எதுவும் இல்லை. மேலும், நேற்றிரவு டிரான்ஸ்பார்ஃமரில் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், காலையில் அது சீர்செய்யப்பட்டு, மின்விநியோகம் வழங்கப்பட்டது," என சிம்ப்ளிசிட்டியிடம் அதிகாரிகள் கூறினார்.
காருண்யா நகர் அருகே உள்ள நூர்வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவரின் மனைவி எஸ். சின்னமணி (65). உடல்நலக் குறைவால் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சின்னமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால், புழுக்கம் தாங்காமல் வீட்டின் வெளியே சின்னமணி படுத்திருந்தார். அப்போது, சுமார் அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டின் பக்கம் குட்டியுடன் வந்த காட்டு யானை சின்னமணியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதனிடையே, தங்களது பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுவதே, மூதாட்டியின் உயிரிழப்பிற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
"இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால், வீடுகளை விட்டு வெளியே தூங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். வீட்டின் உள்ளே புழுக்கம் நிலவுவதால், உயிரை பிணையம் வைத்து பெரும்பாலான குடும்பங்கள் வீடுகளுக்கு வெளியே சிறிது தூக்கம் பெறுகின்றனர். நாள்தோறும் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது," என்கிறார் உள்ளூர் குடியிருப்புவாசி.
யானைகளின் நடமாட்டத்தை தவிர்க்கும் விதமாக, வனத்துறையினர் வீடுகளுக்கு வெளியே இரவு நேரங்களில் விளக்குகளை எரிய விடுமாறு எச்சரிக்கின்றனர். ஆனால், மின்சாரம் தடைபடும்போது, எவ்வாறு மின்விளக்குகளை எரிய விடமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், மின்வெட்டு தொடர்பாக மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆனால், இது தொடர்பாக, ஆலந்துரை மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, தொடர் மின்வெட்டு எதுவும் இல்லை. மேலும், நேற்றிரவு டிரான்ஸ்பார்ஃமரில் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், காலையில் அது சீர்செய்யப்பட்டு, மின்விநியோகம் வழங்கப்பட்டது," என சிம்ப்ளிசிட்டியிடம் அதிகாரிகள் கூறினார்.