கோவை : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான நெருக்கம் வெளிப்பட்டுள்ளதாகக் கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான நெருக்கம் வெளிப்பட்டுள்ளதாகக் கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் சிறப்பான வெற்றி பெறுவோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதி தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மேலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இருப்பதால், தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வரவில்லை.
சபாநாயகர் மீது எந்த அடிப்படையில் தி.மு.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என தெரியவில்லை. 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்பில்லை. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மூலம் தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான நெருக்கம் வெளிவந்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுப்பதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்...?.
தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டு குடிநீர் பிரச்சனை எங்கும் ஏற்படக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், என அவர் தெரிவித்தார்.