கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், காவல் உடையில் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், காவல் உடையில் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் காவலர் ஒருவர் காவலர் உடையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, இந்த கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், பணியில் இருந்தபோது சோமனூர் புறக்காவல் நிலையத்தில் பெண் காவலர் இந்த தகாத உறவில் ஈடுபட்டு உள்ளதாக முதலில் தகவல் வெளியாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர், இது பணியின்போது நடக்கவில்லை என்றும், இது தனியார் இடம் என விளக்கம் அளித்தனர்.

இருப்பினும், காவலர் உடையில் தவறாக நடந்து கொண்டதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் காவலர் ஒருவர் காவலர் உடையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, இந்த கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், பணியில் இருந்தபோது சோமனூர் புறக்காவல் நிலையத்தில் பெண் காவலர் இந்த தகாத உறவில் ஈடுபட்டு உள்ளதாக முதலில் தகவல் வெளியாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர், இது பணியின்போது நடக்கவில்லை என்றும், இது தனியார் இடம் என விளக்கம் அளித்தனர்.

இருப்பினும், காவலர் உடையில் தவறாக நடந்து கொண்டதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.