ஆமை வேகத்தில் நடக்கும் உதகை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் : உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி

நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.



உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் திட்டத்தை கடந்த 2 ஆண்டுக்கு முன் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை துவக்கி வைத்த போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, உதகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.

ஆனால், பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், இரவு நேரங்களில் போதிய மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள், தங்களது பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு முடியாமல் இருளில் தவித்து வருகின்றனர். மேலும், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தவிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து கழகமும் உடனடி நடவடிக்கை எடுத்து பணிகளை துரிதவேகத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...