கோவை : பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
கோவை : பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த மெட்டு வாவி அரிஜன காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி வனிதாமணியின் (37) கர்ப்பத்தைக் கலைப்பதற்காக வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சிமியின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, வனிதாமணிக்கு அவர் கருக்கலைப்பு ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனிதாமணியின் உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, வனிதாமணியின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.
பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசமணியின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் கிருஷ்ணா, தனம் ஆகிய குழுவினர், முத்துலட்சுமியின் மருத்துவமனையில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முத்துலட்சுமியின் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, முத்துலட்சுமியின் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனிடையே, தலாறைவாக இருந்த போலி மருத்துவர் முத்துலட்சுமியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசார் முத்துலட்சுமியை நாகப்பட்டினம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.