முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட விநாயகனின் ரேடியோ காலர் தொலைந்தது

நீலகிரி : கடந்த டிசம்பர் மாதம் கோவையில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட போது விநாயகனின் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் தற்போது கழன்று விழுந்துவிட்டது.

நீலகிரி : கடந்த டிசம்பர் மாதம் கோவையில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட போது விநாயகனின் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் தற்போது கழன்று விழுந்துவிட்டது. 

விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், குடியிருப்புகளுக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் இருந்து விநாயகன் என்ற காட்டு யானை கடந்த டிசம்பர் பிடிக்கப்பட்டு, முதுமலையில் கொண்டு சென்று விடப்பட்டது. இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக, அதன் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. 

சுமார் 6 மாதங்களாக தமிழகம் - கர்நாடகா எல்லையில் உலவி வந்த விநாயகனின் நடமாட்டத்தை இந்தக் கருவியின் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அவ்வப்போது, கிராமங்களுக்குப் புகுந்து, விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் விநாயகனை கண்காணிக்கும் பணியை கைவிட்டனர். அதற்கேற்றவாறே, விநாயகனும் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்து வந்தான். 

இந்த நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு விநாயகனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் கழன்று விழுந்துள்ளது. இதற்கு காரணம், விநாயகன் யானை உடல் எடை குறைந்ததுதான் என வனத்துறையினர் கூறுகின்றனர். முன்னதாக, கோவையில் இருந்து பிடித்துச் செல்லும் போதே, விநாயகனின் உடல் எடையில் மாற்றம் ஏற்படும் என வனத்துறையினர் கணித்திருந்தனர். தற்போது, உடல் எடை குறைந்து விட்டதால், விநாயகனின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ காலர் இலகுவாகி கழன்று விழுந்துள்ளது, என்கின்றனர். இருப்பினும், வனத்துறையினர் குழு அமைத்து, விநாயகனின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...