நீலகிரி : உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் மலர்கள் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.
நீலகிரி : உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் மலர்கள் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிகளவு உள்ளன. இந்த நிலையில், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகை நகரில் சாலையோரங்கள், சுற்றுலா தலங்கள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தவும், வேலிக்காகவும், வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜப்பான் மரங்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த மரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மலர்கள் பூக்கும். இந்த காலங்களில் மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, மலர்கள் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்குவதால் மரம் முழுவதும் அழகாக காட்சியளிக்கும். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை சாலையோரங்களில் பூத்து குலுங்கும் இந்த ஜப்பான் நாட்டு மலர்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஜப்பானில் இந்த மலர்கள் பூக்கும்போது வசந்த காலம் தொடங்கியதாகக் கருதப்படுவதால், நீலகிரியில் இந்த மலர்கள் ஜப்பான் மலர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதனை உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகம் ரசித்து செல்வதுடன், செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிகளவு உள்ளன. இந்த நிலையில், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகை நகரில் சாலையோரங்கள், சுற்றுலா தலங்கள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தவும், வேலிக்காகவும், வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜப்பான் மரங்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த மரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மலர்கள் பூக்கும். இந்த காலங்களில் மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, மலர்கள் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்குவதால் மரம் முழுவதும் அழகாக காட்சியளிக்கும். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை சாலையோரங்களில் பூத்து குலுங்கும் இந்த ஜப்பான் நாட்டு மலர்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஜப்பானில் இந்த மலர்கள் பூக்கும்போது வசந்த காலம் தொடங்கியதாகக் கருதப்படுவதால், நீலகிரியில் இந்த மலர்கள் ஜப்பான் மலர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதனை உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகம் ரசித்து செல்வதுடன், செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.