கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின் போது, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின் போது, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது, தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய 39 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது, தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய 39 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.