10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் : விரக்தியில் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

திருப்பூர் : திருப்பூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், விரக்தியடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், விரக்தியடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள்கோவில் பகுதியில் வசித்து வருகின்றார். இவரது மகன் சிவசுப்பிரமணியன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சிவசுப்பிரமணியன் தனது மதிப்பெண்ணை பள்ளியில் வந்து பார்க்கும் போது, 247 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளது தெரியவந்தது. 

குறைந்த மதிப்பெண் பெற்றதால் நேற்று காலை முதலே மனச்சோர்வுடன் இருந்து வந்த மாணவன் சிவசுப்பிரமணியன், நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின் சம்பவ அறிந்து வந்த காவல் துறையினர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...