சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்தக் கோரி மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கில், வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்தக் கோரி மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கில், வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த கோரி ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், புதிதாக வழங்கிய 4 வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாதர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 12-க்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த கோரி ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், புதிதாக வழங்கிய 4 வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாதர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 12-க்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.