கோவை முத்தூட் மினி பைனான்ஸில் 814 சவரன் நகை கொள்கை சம்பவம் : ஒருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை

கோவை : ராமநாதபுரம் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : ராமநாதபுரம் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த நிறுவனத்தில் பணியில் ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண் ஊழியர்கள் இருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து பெண் ஊழியர்கள் இருவரையும் தாக்கி நகை பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார். 



முகமூடி அணிந்து வந்த நபர் தாக்கியதில் மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள், சம்பவம் குறித்து தங்கள் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்தூட் நிறுவனம் மற்றும் கீழே இருந்த அரிசி கடை ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில், முகமூடி அணிந்த நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அந்நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையில் வெளியாட்கள் ஈடுபட்டு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என சந்தேகித்த போலீசார், அந்த நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில் சுரேஷ் என்பவரை கேரளாவில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முத்தூட் நிதி நிறுவன பணியாளர் ரேணுகா தேவியை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...