கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 46-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 46-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

ஆழியாறு - வால்பாறை இடையிலான மலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, வனவிலங்குகளுக்கு தூய்மையான வாழ்விடத்தை அமைத்து தரும் நோக்கில் ‘டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்’ என்ற குழு வாரத்தின் இறுதி நாளில் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, தற்போது 46-வது வாரமாக நடைபெற்றது.

ஆழியாறில் இருந்து வால்பாறை மலைப்பகுதியின் 2-வது கொண்டை ஊசி வளைவு வரை, வனத்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியில் 10 பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. செங்குத்தான சரிவுகளில் தன்னார்வலர்கள் கயிறு கட்டி இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அடுத்த வாரமும் இதேப் பகுதியில் தூய்மை பணியை தொடர தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தத் தூய்மைப் பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 97154-05653 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

ஆழியாறு - வால்பாறை இடையிலான மலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, வனவிலங்குகளுக்கு தூய்மையான வாழ்விடத்தை அமைத்து தரும் நோக்கில் ‘டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்’ என்ற குழு வாரத்தின் இறுதி நாளில் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, தற்போது 46-வது வாரமாக நடைபெற்றது.

ஆழியாறில் இருந்து வால்பாறை மலைப்பகுதியின் 2-வது கொண்டை ஊசி வளைவு வரை, வனத்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியில் 10 பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. செங்குத்தான சரிவுகளில் தன்னார்வலர்கள் கயிறு கட்டி இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அடுத்த வாரமும் இதேப் பகுதியில் தூய்மை பணியை தொடர தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தத் தூய்மைப் பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 97154-05653 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.