திருப்பூர் : திருப்பூரில் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெவ்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெவ்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு ஆதவன் நகரைச் சேர்ந்த சுப்ரமணி,கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை செல்போனில் படம் பார்க்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை விசாரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த முருகசாமி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வீடுதிரும்பும் வழியில் சிறுமியை மிரட்டி வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
பெருந்தொழுவை சேர்ந்தவர் பி. கார்த்திக் என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 சிறை ஆண்டு சிறைதண்டனையும் மற்றும் ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த இந்த 3 பாலியல் புகாரினையும் விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். பின்னர் குற்றவாளிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு ஆதவன் நகரைச் சேர்ந்த சுப்ரமணி,கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை செல்போனில் படம் பார்க்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை விசாரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த முருகசாமி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வீடுதிரும்பும் வழியில் சிறுமியை மிரட்டி வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
பெருந்தொழுவை சேர்ந்தவர் பி. கார்த்திக் என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 சிறை ஆண்டு சிறைதண்டனையும் மற்றும் ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த இந்த 3 பாலியல் புகாரினையும் விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். பின்னர் குற்றவாளிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.