திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் வீட்டின் முன்பு தீக்குளித்த வாலிபர் பலி : கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை : ராமநாதபுரம் அருகே திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், காதலியின் வீட்டு முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : ராமநாதபுரம் அருகே திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், காதலியின் வீட்டு முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் இம்மானுவேல் ராஜ் (26). இவர் கோவையிலுள்ள தனியார் தண்ணீர் விநியோக நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் புலியகுளம் பெரியார் நகரிலுள்ள ஒரு வீட்டு முன்பு, நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்ட அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இளைஞர் தற்கொலை முயற்சியில் முயன்றதை அறிந்து தீயை விரைவாக அணைத்தனர். பின்னர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் இம்மானுவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், பெண்ணின் வீட்டு முன்பு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...