நீலகிரி : நீலகிரி அருகே வழிதவறி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் மற்றும் கிராமத்தினர் இணைந்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
நீலகிரி : நீலகிரி அருகே வழிதவறி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் மற்றும் கிராமத்தினர் இணைந்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பெரியார் நகர், முள்ளி மலைப்பகுதி மற்றும் முள்ளிக்கூர் பகுதிகள் வழியாக அங்குள்ள கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகளின் கூட்டம் தடம் மாறி நுழைந்தது. இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். யானைகள் அங்குள்ள தேயிலைத் தோட்டம், விளைநிலங்களில் உலவி வந்தன. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக பொதுமக்களை எச்சரித்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானைக் கூட்டங்களை மீண்டும் முள்ளி வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பெரியார் நகர், முள்ளி மலைப்பகுதி மற்றும் முள்ளிக்கூர் பகுதிகள் வழியாக அங்குள்ள கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகளின் கூட்டம் தடம் மாறி நுழைந்தது. இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். யானைகள் அங்குள்ள தேயிலைத் தோட்டம், விளைநிலங்களில் உலவி வந்தன. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக பொதுமக்களை எச்சரித்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானைக் கூட்டங்களை மீண்டும் முள்ளி வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.