சூலூர் இடைத்தேர்தலுக்கான பொது மேற்பார்வையாளர் நியமனம்

கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான பொது மேற்பார்வையாளராக அருண்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான பொது மேற்பார்வையாளராக அருண்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. 

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19-ம் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் இன்று வரை பெறப்பட்டன. மொத்தம் 55 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வாபஸ் பெற கடைசி நாள் மே 2-ம் தேதியாகும்.

இந்த நிலையில், சூலூர் இடைத்தேர்தலுக்கான பொது மேற்பார்வையாளராக அருண்குமாரை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர், தேர்தல் நடைமுறை மற்றும் மேலாண்மை பணிகளை கண்காணித்து நேர்மையாக தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள், அதிகாரி அருண்குமாரை அலைபேசி : 9385286320, தொலைபேசி : 0422-2960044, பேக்ஸ் எண் : 0422-2222296 ஆகியவற்றின் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...