பள்ளியில் முதலிடம் பிடித்தும் மேற்படிப்பிற்கு தடையாய் இருக்கும் குடும்ப சூழல் : உதவியை எதிர்பார்த்திருக்கும் மாணவி..!

கோவை : மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 554 மதிப்பெண்கள் பெற்றும், குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வருகிறார் மாணவி அனிதா.

கோவை : மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 554 மதிப்பெண்கள் பெற்றும், குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வருகிறார் மாணவி அனிதா. 

பொதுத் தேர்வு தொடங்க இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாணவி அனிதாவின் தந்தை காலமானார். தாங்க முடியாத இழப்பாக இருந்த போதிலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தந்த நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் 554 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது திறமையைப் பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. இந்திரா, உயர்கல்வி படிக்க உதவும் பொருட்டும், ஊக்குவிக்கும் வகையிலும் ரூ. 5,000 வழங்கினார். 

மேலும், ஏழ்மை நிலையில் இருக்கும் இந்த மாணவி மேற்படிப்பு படிப்பதற்காக உதவி வேண்டியுள்ளார். இவருக்கு உதவிட எண்ணமுடைய நல்லுள்ளங்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு, உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் 9600727100, ஆசிரியர் பரத் 9600888789.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...